சனி, அக்டோபர் 01, 2005

புழுத்த அரசியலில் மக்கள் மீன்கள்

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என் தந்தையால் எழுதப்பட்ட கவிதை; இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்!

புழுத்த அரசியலில் மக்கள் மீன்கள்

மாநாடு கூட்டும் சாதி சங்கங்களே!
மாந்தர் அறிவார்
சேற்றில் செந்தாமரை பூக்குமென்று.

ஆனால் நீங்கள்
அரசியல் சகதி
ஆர்பாட்டத்தில்
அனைத்தும் கிடைக்கும் என
ஆர்பரிக்கிறீர்கள்.

உண்டி குலுக்கி அரசியல்வாதி
உலகம் ஆள
'சாமானியன் நான்' என
சாகசம் காட்டுகிறார்.

கஞ்சி குடிக்கும் காசை நீங்கள்
சங்கம் நடத்தும் பேர் ஆசையில்
கரைக்கிறீர் இங்கு மெரினா கடலில்.

அடிமடியில் கை போட்டு
ஆளுக்கு பலகோடி என சொத்து
அவர் சேர்க்கிறார், கண் எதிரில்.

தன் கையே தனக்கு உதவி
என்பதை தான் மறந்து, நீங்கள்
மண்ணிலே மாயப் பார்க்கிறீர்களே இங்கு.

அரசியல் அரிதாரம் பூசி
அவதார வேடமிட்டு
அரசு கட்டிலேறி
அங்கு சாதி இரண்டல்ல
அறுநூறு என்றும்,
அத்தனையும் தாழ்ந்தது
அனைவரும் தாழ்ந்தவரே என்பார்.

எந்தாய் உயர்ந்தவன்
என் இனம் உயர்ந்தது
என் மனம் உயர்ந்தது
என நிமிர்ந்து எழாமல்
எதிலும் நான் தாழ்ந்தவன்
என் குலமும் தாழ்ந்தது
எனப் புலம்புவது எதற்காக?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒருவர் தாழ்ந்தவர் என்றாலும்
ஒற்றுமை நீங்கும் இங்கு
ஒன்றி உணரீரோ இன்று?

3 Comments:

Blogger erode soms said...

அரசியல் தூண்டிலில் மாட்டும்
மக்கள்மீன்களுக்காக நன்கு
சொன்னீர்...

3:41 PM  
Blogger ரங்கா - Ranga said...

சித்தன், தங்கள் பாராட்டுக்கு நன்றி.

3:46 PM  
Blogger Balakrishnan Narayanan said...

Jaathikalin peyaril Arasiyal (MEAN POLITICS)nadathum sakkadai arasiyalil sikki thavikkum MEENKALAI-Pattri nanraha soneerkal.
Cinema Heroakkaalin Rasikar sangangalai vaithukkndu panathaiyum, kaalathaiyum paazhaakkum pala eazhai rasikarkalaippattriyuum kavidhai ezhudhungal.

Very Nice Kavidhai
Vaazhukkal!

Bala

10:23 AM  

கருத்துரையிடுக

<< Home