குயிலும் காக்கையும்!
பதினேழு வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த இரு நண்பர்களோடு என் தந்தை பேசிக்கொண்டிருந்தார் - நல்லவர்கள் அரசியலுக்கு வரலாமா? என்பது பற்றி. அப்போது எழுதிய கவிதை இது:
நாட்டு நடப்பைக் கண்டு
உண்மைக் குயில்கள்
சோககீதம் கூட இசைக்க
மறந்து மௌனமானால்,
பதவிக் காக்கைகள்
பலகூடி கோரமாய்
கோஷ்டிகானம் பாடும்.
நாட்டு நடப்பைக் கண்டு
உண்மைக் குயில்கள்
சோககீதம் கூட இசைக்க
மறந்து மௌனமானால்,
பதவிக் காக்கைகள்
பலகூடி கோரமாய்
கோஷ்டிகானம் பாடும்.